'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரும் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இசைப்புயல் ரஹ்மானும் ஜல்லிக்கட்டுக்காக நாளை களம் இறங்க உள்ளார்.
இதுதொடர்பாக ரஹ்மான் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை நான் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்று ஒரு பேராட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.