Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன்: யோகி பாபு

19 ஜன, 2017 - 01:47 IST
எழுத்தின் அளவு:
I-like-to-join-in-Army-says-Yogi-Babu

சினிமாவுக்கு, அழகு என்பதை தாண்டி, திறமை போதும் என, நிரூபித்த மற்றுமொரு நடிகர், யோகி பாபு. யதார்த்தமான நடிப்பால், நேரத்திற்கு பொருத்தமான காமெடி செய்து, ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நடிகர் இவர். கடந்தாண்டு மட்டும், 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது முகத்தை பார்த்தாலே, திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். சிறந்த காமெடியனுக்கான ஆறு விருதுகளை அள்ளி வந்த, யோகி பாபுவுடன் ஒரு சந்திப்பு:


* ஆரம்பமே அமர்க்களமாக, விருதுகளுடன் இந்த ஆண்டு உங்களுக்கு துவங்கியிருக்கே?


ஆமாம்; ரசிகர்களுக்கு இதற்காக நன்றி கூறுகிறேன். இதுவரை, ஆறு விருதுகளை வாங்கியிருக்கிறேன். எனக்கு ரசிகர்களிடம் கிடைத்த இந்த இடத்தை தக்க வைக்க, எதிர்காலத்திலும் கடுமையாக உழைப்பேன்.


* உங்க குடும்பத்தில், வேறு யாராவது சினிமாவில் இருக்கின்றனரா?


என் குடும்பத்தினருக்கு, சினிமா தொடர்பே இல்லை. ஸ்ரீபெரும்புதுார் தான், என் சொந்த ஊர். அப்பா, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால், எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என, ஆசை இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.


* சினிமாவுக்கு வருவதற்கு முன், என்ன வேலை பார்த்தீர்கள்?


கார் கண்ணாடி கடையில் வேலை பார்த்தேன்; அப்புறம், சின்ன சின்ன வேலைகள் பார்த்திருக்கேன். சினிமாவுக்குள் வருவதற்கு ரொம்ப சிரமப்பட்டேன்.


* ராணுவம் என்றால், உடம்பை கட்டுக் கோப்பாக பராமரிக்க வேண்டுமே?


இப்போது இருக்கும் என் உருவத்தை பார்த்துட்டு, கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஆனால், சின்ன வயதில் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் சிக்கி, முதுகில் அடிபட்டது. அதன்பின் தான், உடல் எடை அதிகரித்து விட்டது. என் ஒட்டுமொத்த கனவும் கலைந்த நேரம் அது.


* சினிமாவுக்கு வரலாம் என, எப்படி தைரியமாக முடிவு எடுத்தீங்க?


எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அப்போது தோன்றிய எண்ணம் தான், சினிமா. அதற்கு முன், லொள்ளு சபா என்ற, டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஒரு ஐந்தாண்டு ஓடியது. அந்த நிகழ்ச்சி முடிந்தபின், என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். அதன்பின் தான், சினிமா வாய்ப்பு தேட துவங்கினேன். பஸ்சில் ஏறி, ஒவ்வொரு கம்பெனியாக வாய்ப்பு தேடினேன். சிலர், என்னை திட்டி அனுப்பினர். மேலும் சிலர், வாய்ப்பு தந்தனர். இப்படி தான், யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கலகலப்பு, மான் கராத்தே, பட்டத்து யானை போன்ற படங்கள், என்னை ரசிகர்களிடம் அடையாளம் காட்டின. இதன்பின், ரசிகர்கள் என்னை விரும்பத் துவங்கினர்.


* உங்களுக்கு காமெடி எழுத யாரும் உதவி செய்கின்றனரா?


அப்படி எல்லாம் யாரும் இல்லை. ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போதும், அந்த பட இயக்குனர்களுடன் பேசி, ஒரு முடிவுக்கு வருவேன். தனியா ஆபிஸ் போட்டு எழுதுவது இல்லை. ஸ்பாட்டில் என்ன வருகிறதோ, அதை எழுதி வைத்து நடிக்கிறேன்.


* உங்களுக்கும், மொட்டை ராஜேந்திரனுக்கும் தான் போட்டியாமே ?


நாங்க இரண்டு பேரும், தொடர்ந்து நடிப்பதால் அப்படி பேசுகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பேரும் சேர்ந்து, ஆறு படங்கள் நடித்து விட்டோம். அவர், என்னை கலாய்ப்பது போன்ற காட்சி வந்தால், அண்ணே இப்படி பேசுங்க என, நானே கூறுவேன். அவரும், அதே போல் சொல்வார்; மற்றபடி எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை.




* கண்ணாடி முன் உங்கள் முகத்தை பார்க்கும் போது எப்படி இருக்கும்?


ஆரம்பத்தில் நீயெல்லாம் என்னத்தடா சாதிக்கப்போற... என்று நினைப்பேன். ஆனால் இப்போது என்னாலேயும் ஏதோ செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. கண்டிப்பாக நான் சாதிப்பேன்.


* உங்களுக்கு பிடித்த காமெடியன்கள் யாரு ?


எனக்கு எம்ஆர்.ராதாவை ரொம்ப பிடிக்கும், அவரோட நடிப்பை ரசிப்பேன். அடுத்து கவுண்டமணி-செந்தில் காமெடி பிடிக்கும். அவர்களின் காமடி பார்த்து வளர்ந்தவன் நான்.


* நடிகர் ஆனது சந்தோசமா, இல்லை மிலிட்டரி வேலை சந்தோசமா?


சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி மிலிட்டரி கிடைத்தால் மிகவும் சந்தோஷ அடைந்திருப்பேன். அனால் இப்போது சினிமா என் தொழிலாகிவிட்டது. சம்பளமும் நன்றாக கிடைக்கிறது.


* சம்பள விஷயத்தில் நீங்க எப்டி..?


எனக்கு என்று ஒரு மேனேஜர் இருக்கிறார். அவர்கள் கால்ஷீட் விஷயத்தை மட்டும் பார்த்து கொள்கிறார்கள். ஆனால் சம்பளம் விஷயம் என்னை கேட்காமல் முடிவு செய்ய மாட்டார்கள். இவ்வளவு கொடுங்க என்று அடம் பிடிக்க மாட்டேன், சில கம்பெனிகள் குறைவாக தந்தாலும் வாங்கி கொள்கிறேன்.


* சினிமாவுக்கு வந்து நீங்க புரிந்து கொண்ட விஷயம்?


நாம சரியாய் இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். சினிமாவுக்காக நம்ம வேலை பார்க்கலாம், நமக்காக சினிமா வேலை பார்க்காது. நீங்க உங்க வேலையில் மட்டும் கவனமாக இருந்தால் சினிமா உங்களை கை தூக்கி அழைத்து செல்லும் என்பதை புரிந்து கொண்டேன்.


* ஷாருக்கானுடன் நடித்தீர்கள் அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கவில்லையே...?


ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. அவர் பேசுவது எனக்கு புரியாது, நான் பேசுறது அவருக்கு புரியாது. ஆனால் இரண்டு பேரும் செட்டில் சிரித்து கொண்டே இருப்போம். ஷாரூக் எனக்கு நிறைய ஹிந்தி வார்த்தை சொல்லி கொடுத்தார். ஆனால் எனக்கு எதுவும் வரவில்லை, இப்போது மீண்டும் ஒரு ஹிந்திப்பட வாய்ப்பு வந்துள்ளது. விரைவில் அது முடிவாகும்.


* சாப்பாடு, உடற்பயிற்சி எல்லாம் எப்படி.?


நான் காட்டு மிராண்டி மாதிரி எது கிடைத்தாலும் சாப்பிடுவேன். குறிப்பாக குலோப்ஜாமுன் நிறைய சாப்பிடுவேன். நேரம் கிடைக்கும்போது உடற்பயிற்சி செய்வேன்.


* நீங்க எப்போது ஹீரோவாக நடிக்க போறீங்க.?


காமெடி நடிகர்களாக வந்தது சில பேர் தான், அப்படி வந்தர்கள் பர்சனாலிட்டியாக இருந்தாங்க, தைரியமாக நடித்தார்கள், ஆனால் எனக்கு பெர்சனாலிட்டி ஜீரோவில் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக நான் நடிக்க வாய்ப்பே இல்லை.


* உங்களுக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின் யார் ?


நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரது நடிப்பை மிகவும் ரசிப்பேன். அவருடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது, ஆனால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. விரைவில் அவருடன் நடிப்பேன்.


* இந்தாண்டு உங்களுக்கு திருமணம் என்று கேள்விப்பட்டோம், லவ் மேரேஜ்ஜா.?


இந்த ஆண்டு நான் கல்யாணம் செய்யவில்லை என்றால் சுந்தர் சி, என்னை துடப்ப கட்டையால் அடித்து விடுவார். இரண்டு வருடமாக என்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டு வருகிறார், நானும், அந்தா, இந்தா என்று சமாளித்து வருகிறேன். என்னையெல்லாம் யாரு லவ் பண்ணப்போறா...?, அப்படி யாராவது வந்தால் உடனே கல்யாணம் தான். பள்ளி பருவத்தில் சும்மா ஜாலிக்காக சைட் அடிப்பேன், மற்றபடி என்னை பற்றி என் ஏரியாவில் கேட்டு பாருங்க, குனிந்த தலை நிமிராத பையன் என்று சொல்வார்கள்.


* உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?


ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து இந்தாண்டில் நான்கு படம் நடிக்கிறேன். ஜெய் உடன் பலூன் படம், சித்தார்த் உடன் ஒரு படம் நடிக்கிறேன். இதுதவிர கடந்தாண்டு நடித்த பல படங்கள் இந்தாண்டு ரிலீஸாக உள்ளது.


தினமலர் வாசகர்களுக்கு என் நன்றி!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in