திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. பலவேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.கே.சதீஷ்குமார் படத்தை வாங்கி டிசம்பர் 23ந் தேதி வெளிவருவதாக அறிவித்தார், ஆனால் வரவில்லை. அதன்பிறகு பொங்கலுக்கு கட்டாயம் வரும் என்றார் வரவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரபேல் ஸ்டூடியோ தீபன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
எங்கள் அனைவருக்கும் வருத்தமான தருணம் இது. முதன் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் நான், புரியாத புதிர் பொங்கல் திருவிழா நாளில் வெளியாவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தேன். அதுமட்டுமின்றி படத்துக்கு எல்லா தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால் என்னுடைய தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ஆக்கோ திரைப்படம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையால் புரியாத புதிர் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி எங்களின் வெற்றி தள்ளிபோயிருக்கிறதே தவிர, மறுக்கப்படவில்லை. விரையில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்கிறார் தீபன்.