கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமீபகாலமாக விமலின் படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால் தானே சொந்தமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார். ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு திட்டமிட்டு கடந்த டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமானர். ஆனால் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் "மன்னர் வகையறா" படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த விமல் " மன்னர் வகையறா " திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.
"துருவங்கள் பதினாறு" பாணியில் குறும்பட இயக்குனர் தரண் சொன்ன கதை பிடித்து போனதால் அந்த கதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்திற்கு இசை அமைக்கிறார். நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.