இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய்யுடன் பைரவா படத்தில் நடிக்க கமிட்டானதில் இருந்தே கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் எகிறி விட்டது. அதோடு, அவருக்கு ரசிகர் மன்றம் திறப்பதற்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்த ரசிகர்களை அவரை சந்தித்தனர். ஆனால், அப்போது, ரசிகர் மன்றம் திறக்கும் அளவுக்கு நான் பெரிய நடிகையாகி விட்டேனா? என்று அவர்களை நோக்கி கேள்வி கேட்ட கீர்த்தி சுரேஷ், இன்னும் சில படங்கள் ரிலீசான பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.
ஆனால், அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து பைரவா படம் வெளியானதை அடுத்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நகரமெங்கும் பைரவா வெற்றி பெற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல், பைரவா படம் வெற்றி பெற கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வாழ்த்தும் போஸ்டர்களும் சினிமா வட்டாரங்களில் ஒட்டப்பட் டுள்ளது. ஆக, இப்போதைக்கு ரசிகர் மன்றமே வேண்டாமென்று சொன்ன கீர்த்தி சுரேஷ், சத்தமில்லாமல் ரசிகர் மன்றம் திறப்பதற்கு ஓகே சொல்லி விட்டதாக தெரிகிறது.