பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
தமிழ்த் திரையுலகில் இப்போதுள்ள நடிகர்களில் டிவிட்டர் 'டிரென்டிங்'கில் வந்தாலே போதும், நாம் வளர்ந்து விடலாம் என நினைப்பவர்களில் ஜி.வி.பிரகாஷ் முதன்மையானவர். விஜய்யை ஆதரித்தும், அஜித் ரசிகர்களை வம்பிக்கிழுத்தும் அடிக்கடி டிவிட்டரில் தான் இருப்பதை பதிவு செய்து கொண்டேயிருப்பார். எதைப் பற்றி சொல்வதென்றாலும் அதை முதலில் டிவிட்டரில்தான் சொல்ல வேண்டும் என நினைப்பவர். அப்படிப்பட்டவர் 'புரூஸ் லீ' படம் தள்ளிப் போனதைப் பற்றி இதுவரை தன்னுடைய டிவிட்டரில் எந்த ஒரு பதிவையும் போடாமல் அமைதி காக்கிறார். ஏற்கெனவே, கடந்த ஆண்டில் தன்னுடைய படங்கள் சரியாகப் போகாததால் பொங்கலுக்கு வெளிவரும் 'புரூஸ் லீ' படம் தன்னைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
அதோடு, 'அண்ணா உங்களோட வர்றோம்' என 'பைரவா' படத்துடன் 'புரூஸ் லீ' படம் வெளிவருவதை விஜய்யின் பெயரை வைத்து விளம்பரம் தேடி வந்தார். 'பைரவா' படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தன் படத்தை வந்து பார்த்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஜி.விக்கு படம் வெளிவரவில்லை என்றதும் கோபம் வந்துவிட்டதாம்.
தயாரிப்பாளர்களிடம் சண்டை போட்டுவிட்டு அந்தப் படம் தள்ளிப் போனதைப் பற்றிக் கூட தன் டிவிட்டரில் எதுவும் போடாமல் விட்டுவிட்டார் என்கிறார்கள். 'புரூஸ் லீ'ன்னு பெயர் வைத்துவிட்டு ஒரு சண்டை கூட வரவில்லை என்றால் எப்படி?.