ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார். அதில் தான் நியாமான வீட்டு வாடகை செலுத்தி வருவதாகவும், ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார். எனவே வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டில் இருந்து காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஜன., 4-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, வாடகை வீட்டில் இருக்கும் நமீதாவை, வீட்டின் உரிமையாளர் காலி செய்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.