டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
30 வயதை கடந்து விட்டால் நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டு விடும் என்கிற நிலை மாறி, இப்போதெல்லாம் 30 வயதுக்கு பிறகுதான் சில நடிகைகளின மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களைத் தொடர்ந்து டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு மெகா படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களின் டைரக்டர் டிகே இயக்குகிறார். தற்போது கலெக்டர், போலீஸ், ஹாரர், கிரைம் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் ஒரு செண்டிமென்ட் கதையில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழில் உருவானபோதும், மலையாளம், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட ஏஜிஎஸ் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம். கொலையுதிர் காலம் படத்தில் நடித்து வரும்போதே இந்த படத்திலும் நடிக்கிறாராம் நயன்தாரா.