ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
500,1000 ரூபாய் நோட்டின் மதிப்பு நீக்க நடவடிக்கையினால் திரைப்படத்துறையினர் திணறிப்போயிருக்கிறார்கள். தைரியமாக வெளியிட்ட அச்சம் என்பது மடமையடா, சென்னை-28-2 போன்ற படங்களை தவிர மற்ற படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
இம்மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பல படங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. லட்சுமணன் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, ஹன்சிகா,அரவிந்த்சாமி நடித்துள்ள 'போகன்' படத்தை இம்மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் போகனின் ரிலீஸை அடுத்த மாதத்திற்கு அதாவது ஜனவரி-26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டனர்.
'போகன்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஜனவரி 26-ஆம் தேதி அன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'கவண்' படமும் வெளியாக இருக்கிறது. ஒருவேளை தள்ளிப்போனால் ஃபிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 26-ஆம் தேதி போகனும், கவணும் ரிலீசாகும் பட்சத்தில் முதன்முறையாக ஜெயம் ரவி, விஜய்சேதுபதி நடித்த படங்கள் ஒரேநாளில் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்து பல வருடங்களாக கிடப்பில் கிடந்த மெல்லிசை படம் தற்போது 'புரியாத புதிர்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தையும் ஜனவரி மாதத்திலேயே அதாவது பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்தடுத்த வாரத்தில் தன்னுடைய படங்கள் வெளிவருவது நல்லதல்ல என்பதால் புரியாத புதிர் படத்தை மேலும் சில வாரங்களுக்கு தள்ளி வைக்கும்படி அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறாராம் விஜய்சேதுபதி.