தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இது என்ன மாயம் படத்தை அடுத்து பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த படம் பாம்பு சட்டை. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆடம்தாசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் மனோபாலா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துள்ள இந்த படம் டிசம்பர் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. அதற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பாபிசிம்ஹா, கீர்த்தி சுரேசுடன் தாமிரபரணி பானுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், ஜிகர்தண்டா படத்திற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்த போது அவர் இந்த பாம்புசட்டையில்தான் நடித்துக்கொண்டிருந்தார். அதோடு இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட அழுத்தமான கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்திற்காக பாபிசிம்ஹாவுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கு சில காட்சிகளில் பேச வேண்டிய டப்பிங்கை சமீபத்தில்தான் முடித்துக்கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். அதோடு அன்றைய தினம் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க செல்ல வேண்டியிருந்ததால் அவசரகதியில் டப்பிங் பேசிக்கொடுத்து விட்டு ஆந்திரா பறந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ். அப்போது படம் டிசம்பர் 30-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக சொன்னவர்கள், பிரமோனில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்களாம். அதற்கு ஓகே என்று சொல்லிவிட்டு சென்ற கீர்த்தி சுரேஷ், இப்போது தொடர்பு கொண்டால் தெலுங்கு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக கூறுகிறாராம். இருப்பினும் பாம்புசட்டை பட புரமோசனில் எப்படியும் அவர் கலந்து கொள்ள வருவார் என்று அப்பட யூனிட் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறது.