தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, ‛ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், மணிரத்னத்தின் ‛மெளன ராகம்' சாயல் தெரிந்தாலும் அதை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ஒரு வித்தியாசமான காதல் கதையாக கொடுத்ததால் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் விஜய்யின் ‛தெறி' படத்தை இயக்கி முன்னணி இயக்குநர் பட்டியலில் சேர்ந்துவிட்டார் அட்லீ.
இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் ஆர்யாவுக்கு பிறந்தநாள். அன்றைய தினம் ஏராளமானபேர் ஆர்யாவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ஜெய்யும் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் பேசிய ஒரு விஷயம் ‛ராஜா ராணி', இரண்டாம் பாகத்திற்கான அடித்தளம் போட்டிருப்பதாகவே தெரிகிறது.
ஜெய் தன் டுவிட்டரில்... ‛‛பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் இதயம் கவர்ந்த ஜாமி டார்லிங், என்று கூறியதோடு எப்போது ராஜா ராணி 2 படத்தை துவங்கலாம் என்று ஆர்யாவிடம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஆர்யா தன் டுவிட்டரில், ‛‛நன்றி டார்லிங், உண்மை தான் மச்சான். சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் போன்று, விரைவில் ராஜா ராணி 2 பண்ணுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆர்யா - ஜெய் இந்த பதிவின் மூலம் விரைவில் ராஜா ராணி படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.