இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒருபக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யபோகிறார் என்கிற செய்தி அடிபட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மீரா ஜாஸ்மின். ஆனாலும் வழக்கம்போல கிளாமராக நடிக்கமாட்டேன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன் என்கிற கண்டிசனையும் முன் வைக்கிறாராம். அதனால் மீராவை தேடி ஆவலாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் இந்த கண்டிஷன்களால் ஜகா வாங்குகிறார்களாம்.
இது பற்றி சமீபத்தில் மீரா ஜாஸ்மினிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு மீரா ஜாஸ்மின் கூலாக சொன்ன பதில் என்ன தெரியுமா..? “சிலருக்கு பிரியாணி பிடிக்கும்.. சாப்பிடுகிறார்கள்.. ஆனால் எனக்கு கஞ்சியும் பயறும் தான் பிடித்திருக்கிறது.. அதற்காக என்னை பார்த்து அடடா உனக்கு பிரியாணி கிடைக்கவில்லையே என ஏன் வருத்தப்படுகிறீர்கள்.. படங்களில் நடிப்பதும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பம்” என பொட்டில் அடித்தாற்போல பதில் கூறியுள்ளாராம் மீரா ஜாஸ்மின்.