தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகையர் திலகம் சாவித்ரி. முதன் முதலில் விலை உயர்ந்த கார் வாங்கியவர், பங்களா கட்டியவர், அதிக சம்பளம் வாங்கியவர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தவர் அவர்தான். முதன் முறையாக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக கொடூரமாக மரணம் அடைந்தவரும் அவர்தான். அவரது வாழ்க்கையை தற்போது நாக் அஸ்வின் என்ற தெலுங்கு இயக்குனர் படமாக தயாரித்து இயக்குகிறார்.
படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து சாவித்ரி குடும்பத்தினரிடம் அனுமதியும் பெற்று விட்டார். ஆனால் சாவித்ரியாக நடிக்க தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகமான முன்னணி நடிகையை தேடினார். அனுஷ்கா, வித்யாபாலன், நயன்தரா, காஜல் அகர்வால் நித்யாமேனன் என பல நடிகைகளை அணுகினார். சாவித்ரி கேரக்டரில் நடிக்க ஆர்வமாக வந்தவர்கள். கதையை கேட்டவுடன் நடிக்க தயங்கியதாக கூறப்படுகிறது. கடைசியாக நித்யா மேனன் ஓகே சொல்லி சாவித்ரியின் பழைய படங்களை பார்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார்.