தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் சிவாவின் நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவாவுக்கு பிறந்தநாள், இந்த பிறந்தநாளை சென்னை 28_II படத்தின் வெற்றியோடு கொண்டாடி வருகிறார் மிர்ச்சி சிவா.
இதுப்பற்றி சிவாவிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛முதலில் என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென்று தனி ஸ்டைல் அமைத்து நடிக்கிறேன். அடுத்தவர்களை சந்தோஷமாக வைத்து கொண்டால் நாமும் சந்தோஷமாக இருக்கலாம், எனவே முடிந்தவரை எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்'' என்றார்.