விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கிடாரி படத்துக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பலே வெள்ளையத்தேவா. அவருடன் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரோகினி சசிகுமார் அம்மாவாகவும், சங்கிலி முருகன் தாத்தாவாகவும் நடித்துள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார், பி.சோலை பிரகாஷ் இயக்கி உள்ளார்.
மதுரைக்கார இளைஞனாகவே நடிக்கும் சசிகுமார் இதில் மதுரையில் குடியேறும் வெளியூர் இளைஞனாக நடிக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக தாத்தா பாட்டியுடன் மதுரையில் குடியேறும் சசிகுமாருக்கு வந்த இடத்தில் தன்யாவுடன் காதலும், தாதாக்களுடன் மோதலும் ஏற்படுகிறது. அதை பாட்டி கோவை சரளா உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்கிற கதை. கிட்டத்தட்ட பாட்டி சொல்லை தட்டாதே மாதிரியான கதை என்கிறார்கள்.
இது ஒரு குறுகியகால தயாரிப்பாக எடுத்து முடிக்கப்பட்டு வருகிற கிறிஸ்துமஸ் (25ந் தேதி) அன்று வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான சசிகுமார் கூறியதாவது: படத்தின் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் 50 நாளில் படத்தை முடித்து விட்டோம். தேனி, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. காமெடி, காதல், ஆக்ஷன் சம அளவில் கலந்து உருவாகி உள்ளது" என்கிறார் சசிகுமார்.