கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நாசர் மகன் லுத்புதீன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பறந்து செல்லவா, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கி உள்ளார். படம் இன்று வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின்போது நாயகி ஐஸ்வர்யா எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார் என்று லுத்புதீன் வெளிப்படையாக கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ‛‛பறந்து செல்ல வா“ வில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. சைவம் திரைப்படத்தை முடித்துவிட்டு நான் கதைகளை கேட்டுகொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால், பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். இப்படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது அதில் தாங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். கதையை முழுவதும் படித்தேன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. உடனே ஒப்புக் கொண்டேன்.
ஹீரோவாக நடிப்பதால் முதலில் சின்ன தயக்கம் இருந்தது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்து இருக்கின்றார். அவர் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார். எனக்கு சில இடங்களில் தடுமாறும் போது சொல்லி கொடுத்தார். இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அதை நான் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் “ நீ ஒரு நடிகன் , கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என அறிவுரை கூறினார். மேலும் நடனம் வகுப்புக்கு நான் சென்றது கிடையாது. இப்படத்தில் இரவு நேரங்களில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தை அனைவரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.
படம் முடித்து விட்டு என்னுடைய அம்மாவையும், தாணு சாரையும் அழைத்து படத்தை திரையிட்டோம். அவர் திரைப்படத்தை பார்த்துமுடித்துவிட்டு இடைவெளியில் ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்தேன். அவர் முழு படத்தையும் பார்த்து முடித்து விட்டு என்னை அழைத்து மிகவும் பாராட்டினார். மொத்தம் 50 நாட்களில் எங்கள் படம் படமாக்கபட்டு இருப்பதை கேள்விப்பட்டு எங்களை பாராட்டினார். .
இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும். மிக சிறிய குழு இனணந்து மிக சிறந்த முறையில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளோம். என்கிறார் லுத்புதீன்.