Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அம்மா' இரங்கல் பாடல், கவனம் ஈர்த்த அஸ்மின்

08 டிச, 2016 - 22:29 IST
எழுத்தின் அளவு:
Ashmin-impressed-everyone-by-Amma-tribute-song

இன்று காலை முதலே வாட்ஸ்-அப் மூலம் 'அம்மா இரங்கல் பாடல்' ஒன்று வைரலாகப் பரவியது. அந்தப் பாடலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின். அவர் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டு, இங்கு திரைப்படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த 'நான்' படத்தில் இடம் பெற்ற 'தப்பெல்லாம் தப்பேயில்லை...' என்ற பாடலையும், ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த 'அமர காவியம்' படத்தில் இடம் பெற்ற 'தாகம் தீர...' என்ற பாடலையும், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'சும்மாவே ஆடுவோம்' படத்தில் சில பாடல்களையும் எழுதியிருக்கிறார்.


'அம்மா' பற்றிய இரங்கல் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி அவர் நம்மிடம் தெரிவித்ததாவது,


“அம்மா மறைவுச் செய்தி கேட்ட அந்த நள்ளிரவில், அந்த துக்கத்தில் ஒரு கவிதையைத்தான் முதலில் எழுதினேன். அதை என்னுடைய நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான வர்ஷன் அவர்களுக்கு அனுப்பினேன். அவர் அதைப் படித்துப் பார்த்ததும், இதையே நாம் முழு பாடலாக உருவாக்கினால் என்ன என்றார். உடனே, அப்படியே அதைத் தொடர்ந்தேன். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாடலை எழுதி முடித்தேன்.


காலையில் பாடலுக்கு இசையமைத்த வர்ஷன், அடுத்த சில மணி நேரங்களில் பாடலைப் பதிவாக்கி முடித்தார். அம்மாவின் நல்லடக்கம் நடைபெறும் நேரத்தில் முழுப் பாடலும் தயாராகிவிட்டது. அதன் பின் அந்தப் பாடலை எனது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும், நானும் இசையமைத்த வர்ஷனும், வாட்ஸப்பில் அனுப்பினோம். அது அப்படியே பரவியது. அம்மா மீது பேரன்பு வைத்துள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் இந்தப் பாடல் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தோம். அது இப்போது நடந்துவிட்டது.


இன்று காலை முதல் அது இளையராஜா அவர்கள் உருவாக்கிய பாடல் என்ற தவறான தகவல் பரவினாலும், இந்தப் பாடலை அவர் இசையமைத்த பாடல் என்று சொல்லுமளவிற்கு நாங்கள் உருவாக்கியிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது பெருமையாகவும் இருக்கிறது. இதுவரை நான் எழுதிய பாடல்கள் பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், இந்தப் பாடல் மூலம் எங்கள் மூலமும் வெளிச்சம் பட்டுள்ளது.


இதன் மூலமாவது, என்னைப் பற்றி இசைஞானி இளையராஜா அவர்கள் தெரிய வந்தால் அது எனக்கு பேரானந்தத்தைத் தரும். அவர் இசையில் ஒரு பாடலையாவது எழுதி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். அவருடைய தீவிரமான ரசிகன். அவர் இசையில் பாடலை எழுதும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் இந்த வளரத் துடிக்கும் பாடலாசிரியர் அஸ்மின்.


இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடிய வர்ஷன் 'புறம்போக்கு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இளையராஜாவின் பல மேடை இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் குரலில் வெளிவந்த திரைப்படப் பாடல்களைப் பாடியவர் என்பது கூடுதல் தகவல்.


கடல் தாண்டி உள்ள அஸ்மினின் ஆசையை நிறைவேற்றுவாரா இளையராஜா ?.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in