மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்நாடு அரசு, மற்றும் திரைப்பட சங்கங்களுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் நடத்தும் சென்னை, சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ந் தேதி தொடங்கி 22ந் தேதிவரை நடக்க இருந்தது. இதில் 65 நாடுகளை சேர்ந்த 165 படங்கள் திரையிடப்படுவதாகவும் இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தையொட்டி சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இண்டோ சினி அப்ரிஷேசன் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 வருடங்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெரும் ஆதரவாக இருந்தார். அவரது திடீர் மறைவு எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வருகிற 14ந் தேதி துவங்குவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 5ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ந் தேதி வரை ஒரு வாரம் நடக்கும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேதி தள்ளிவைக்கப்பட்டது தவிர நிகழ்ச்சி நிரலில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.