வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்கில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று(டிச.,5-ம் தேதி) இரவு 11.30 மணியளவில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடலுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ், ரஜினி, இளையராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெயலலிதாவின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., சமாதி அருகே கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் செய்தனர்.
ஜெயலலிதா நம் பார்வையிலிருந்து விலகிவிட்டாரே தவிர, நம் இதயத்தில் இருந்து அல்ல... என்பது மட்டும் திண்ணம்...!