ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெறும் காமெடி மட்டுமே வேலைக்கு ஆகாது என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார் சந்தானம். அதனால் இனி நடிக்கும் படங்களில் காமெடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க உள்ளார் சந்தானம்.
இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரெஜினா கேசன்டரா நடிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தனது அடுத்த பட படத்தின் படப்பிடிப்பை துவங்க டிசம்பர் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறார் செல்வராகவன்.
இந்த படத்தில் சந்தானம் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான யதார்த்தமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். சந்தானம் நடிக்கும் படம் என்றாலே காமெடியாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதையும் தாண்டி இப்போது யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து களம் இறங்க உள்ளார். சந்தானத்தின் இந்த புதிய பாதையை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளபோகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.