ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இயக்கி உள்ள படம் விழித்திரு. கிருஷ்ணா, விதார்த், என இரண்டு ஹீரோக்கள். தன்ஷிகா, அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ் என்ற மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர வெங்கட்பிரபு, தம்பி ராமய்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். சத்யன் மகாலிங்கம் இசை அமைக்கிறார். இது இரவு சாம்ராஜ்யத்தின் கதை.
இது ஒரே இரவில் நடக்கும் கதை. பகலில் பிசியா இருக்கும் சென்னை நகரின் இரவு முகம்தான் படத்தின் கதை களம். நான்கு வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில், நடு இரவில் சந்திக்கும் கதை. நான்கு கதையும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றின் தாக்கம் இன்னொன்றில் இருக்கிற மாதிரியான திரைக்கதை. தன்சிகா, விதார்த் ஒரு கதையிலும், தம்பிராமய்யா ஒரு கதையிலும் கிருஷ்ணா, எரிக்கா பெர்ணாண்டஸ் ஒரு கதையிலும் வெங்கட் பிரபு அபிநயா ஒரு கதையிலும் வருகிறார்களாம். படத்தில் விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாராயணன், சத்யா, தமன், மலையாள இசை அமைப்பாளர் அல்போன்ஸ் டி.ராஜேந்தர் என 6 இசை அமைப்பாளர்கள் பாடியிருப்பது இன்னொரு சிறப்பு அம்சம். படத்தை மீராக கதிரவனே தயாரித்துள்ளார். டிசம்பரில் வெளிவருகிறது.