தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழந்தைகளுக்கு எதிரான சமூக அவலங்களை தடுக்கவே, அரசியலுக்கு வந்தேன், என, நடிகை நமீதா தெரிவித்தார். புதுமுகங்களுடன், நடிகை சோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள, சாயா படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், நடிகை நமீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியலுக்கு வந்தது குறித்து, நமீதா கூறியதாவது: நான் அரசியலுக்கு வந்த போது, ஏன் திடீர் அரசியல் பிரவேசம் என, பலரும் கேள்வி எழுப்பினர். குழந்தைகளுக்கு எதிரான சமூக அவலங்கள் அதிகரித்து வருகின்றன. கல்விக்கான செலவும், அதிகரித்து விட்டது; இதை தடுக்கவே, அரசியலுக்கு வந்தேன். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, கல்வி, வசதியை சம்பாதித்து தருகின்றனர்; சமூகத்தை பற்றியும் கற்றுத் தர வேண்டும்.
முக்கியமாக பாலியல் தொல்லைகளில் இருந்து, குழந்தைகள் தப்பிக்க, தொடுதலில், நல்லது கெட்டதை சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கான சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும். இதுவே, என் தற்போதைய பணி.இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் நடிக்க வந்துள்ள நமீதா, மலையாளத்தில் மோகன் லாலுடன் நடித்த, புலி முருகன் படம், 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதை தொடர்ந்து ராசியான நடிகையாக மாறிய நமீதா, மலையாளத்தில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.