டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பஞ்சாபை சேர்ந்தவர் மெஹ்ரீன். பரதநாட்டிய கலைஞராக வாழ்க்கையை தொடங்கி மாடலாக மாறியவர். அதன் பிறகு இந்த ஆண்டின் துவக்கதில் வெளிவந்த தெலுங்கு படமான கிருஷ்ணா காடி வீர பிரேம கதா மூலம் நடிகையானர். இதில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது துவடா ஜெகன்னாதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கு பில்லாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் மெஹ்ரீன். மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு சுசீந்திரன் தெலுங்கு, தமிழ் மொழியில் இயக்கும் புதிய படத்தில் மெஹ்ரீன்தான் ஹீரோயின். சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கிறார்.
"நிறைய பஞ்சாபி பெண்கள் தமிழ் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். நானும் அந்த வரிசையில் இடம்பிடிப்பேன் என்று நம்புகிறேன். தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கமிட் ஆனபிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு, ஜீவா, நான் மகான் அல்ல படங்கள் பார்த்தேன். நல்ல திறமையான இயக்குனருடன் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன்" என்கிறார் மெஹ்ரீன்.