'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு, ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று (11ந் தேதி) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லிங்கா படத்தின் பாக்கியை தந்து விட்டுத்தான் இந்தப் படத்தை திரையிட வேண்டும் என்ற விநியோகஸ்தர் சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் படத்திற்கு முதலில் தடைவிக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் சிவா நீதிமன்றத்தில் 35 லட்சம் ரூபாய் வழக்கு ஈட்டுத்தொகை செலுத்தி வழக்கை சந்திக்கிறேன் என்றதும் நீதிமன்றம் தடையை நீக்கியது.
இந்த நிலையில் இன்னொரு பிரச்சினை. மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டது. இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் அது வசூல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படத்தை வருகிற 17ந் தேதி வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
500, 1000 நோட்டுகள் தடை சினிமா அரங்குகளில் மக்கள் வரத்தை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகம் முழுக்க பல அரங்குகளில் மக்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 அரங்குகள் காட்சிகளை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படியொரு சூழலில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட முடியுமா என ஆலோசிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து ஆலோசித்ததில் இந்த நோட்டுப் பிரச்சினை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி வரும் நவம்பர் 17-ம் தேதி தமிழகம் மற்றும் உலகெங்கும் கடவுள் இருக்கான் குமாரு படம் வெளியாகும். அதற்குள் மக்களும் இந்த நோட்டு நெருக்கடியிலிருந்து மீண்டு படம் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.