ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த துணிச்சல் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே நாட்டில் வறுமையையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்க பிச்சைக்காரன் படத்தில் ஒரு அருமையான வசனத்தை வைத்திருந்தார் இயக்குநர் சசி. உண்மையிலேயே அவர் வைத்த அந்தக்காட்சி இன்று உண்மையாகியிருக்கிறது.
இதுதொடர்பாக இயக்குநர் சசியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் அளித்த பேட்டி இதோ.... ‛‛இந்தமாதிரி ஒரு மாற்றம் வரும் என்று நினைத்து அந்த வசனத்தை வைக்கவில்லை, ஆனால் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி தான் வைத்தேன். அது நடந்தே விட்டது. படத்தில் அந்தக்காட்சியை சொல்லி நிறைய பேர் பாராட்டினார்கள். இதில் உள்ள பிளஸ் மைனஸ் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இது சிலருக்கு... ஏன், எனக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நல்ல விஷயங்களை படத்தில் உரக்க சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அரசியல் சூழல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் அது சொல்ல முடியாமல் போகிறது. இந்தக்காட்சியை பொறுத்தமட்டில் நான் விடாப்படியாகத்தான் படத்தில் வைத்தேன். பிரதமரின் இந்த அறிவிப்பால் சிலர் பாதிக்கத்தான் செய்வார்கள், ஆனால் கறுப்பு பணத்தை ஒழிக்க, நாடு வளம் பெற அதை பொறுத்து கொள்ள தான் வேண்டும். பிரதமர் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையை நான் மிகவும் வரவேற்கிறேன்.
சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேசமயம் ஒரு தயாரிப்பாளர் பாதிப்படைய கூடாது. சில சமயங்களில் அதுவே நமக்கே ஒரு பிரச்னையாக வருமோ என்ற பயமும் உள்ளது.
என்னை பொறுத்தமட்டில், நாட்டில் சில விஷயங்களை மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் முதலில் கல்வி, மருத்துவத்தில் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு சாரருக்கு நல்ல தரமான கல்வியையும், மற்றொரு சாரருக்கு குறைந்த கல்வியும் வழங்குவது நியாயம் இல்லை. குறைந்தபட்சம் கல்வியையும், மருத்துவத்தையாவது எல்லோருக்கும் சரிசமமாக கொடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குநர் சசி கூறினார்.