இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நீங்கியுள்ளது, இதனால் படம் சொன்ன தேதியில் நாளை ரிலீஸாக உள்ளது.
ராஜேஷ் எம் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛கடவுள் இருக்கான் குமாரு'. இப்படம் நாளை நவ., 10-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிங்காரவேலன் என்பவர் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நடிகர் ரஜினி நடித்த, லிங்கா படத்தின் வினியோக உரிமையை, குறிப்பிட்ட இடங்களுக்கு பெற்றிருந்தேன். வசூலாகும் பணத்தை, தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து பெற்று, தயாரிப்பாளருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட, 7ஜி பிலிம்ஸ் நிறுவனம், தயாரிப்பாளருக்கு, 61.25 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை; அந்த பணத்தை, நான் செலுத்தினேன். பணத்தை திருப்பி தருவதாக, 7ஜி பிலிம்ஸ் உரிமையாளர் உறுதி அளித்தார். தற்போது, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, கடவுள் இருக்கான் குமாரு படத்தை, 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பணத்தை தராமல், படத்தை வெளியிட மாட்டேன் என, எனக்கு கடிதம் அளித்து இருந்தார். இன்னும் பணம் தரவில்லை. உறுதிமொழியை மீறி, நவ., 10ல், படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்; படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட, இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, 7ஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
அதேசமயம் 7-ஜி பிலிம்ஸ் சார்பில் இப்படடத்தை ரிலீஸ் செய்ய அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையில் ரூ.35 லட்சத்தை வைப்பு நிதியாக நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்பு செலுத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடுமாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வாங்கி வெளியிடும் சிவா, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய தொகை செலுத்த ஒப்புதல் கொடுத்ததையடுத்து, 'கடவுள் இருக்கான்' குமாரு படத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை 4 வாரத்துக்குள் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளதால் படம் நாளை ரிலீஸாகும் என தெரிகிறது.