அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சந்தானத்தின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவர் சேது. அந்த அடிப்படையில்தான் தான் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தனக்கு சமமான வேடத்தில் சேதுவை நடிக்க வைத்தார் சந்தானம். அத்துடன் அடுத்து சேது கதாநாயகனாக நடித்த வாலிபராஜா என்ற படத்திலும் சந்தானம் காமெடியனாக நடித்து சேதுவுக்கு ஓப்பனிங் கிடைக்க உதவினார். அப்படியும் வாலிபராஜா படம் எடுபடவில்லை. இந்நிலையில், சேது தற்போது ஹீரோவாக நடிக்கும் படம் ஆளுக்கு பாதி 50-50. கிருஷ்ண சாய் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார்.
லிபி சினி கிராஃப்ட்ஸ் நிறுவனம் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க சந்தானத்தை அணுகினார் சேது. தற்போது ஹீரோவாக பிசியாக இருப்பதால் ஆளுக்கு பாதி 50-50 படத்தில் நடிக்க மறுத்துசிவிட்டார் சந்தானம். அதே நேரம் தன் நண்பருடைய படத்துக்கு அட்டெனஷ்ன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆளுக்கு பாதி 50-50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம். நாளை அதாவது நவம்பர் 9-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுக்கு பாதி 50-50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் சந்தானம். இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ஆளுக்கு பாதி 50-50 மிக விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.