அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படம் வரும் வெள்ளிக்கிழமை 11-ம் தேதியன்று வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. இருந்தாலும் தற்போது வெளிவரும் படங்களின் டிசைன்களில் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடப்படாமலே இருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனனே அவருடைய சொந்த நிறுவனமான 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' மூலம் தயாரித்து வந்தார். அந்த நிறுவனத்தின் யு டியூப் கணக்கில்தான் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், பேட்டிகள் ஆகிய வீடியோக்களையும் வெளியிட்டார்.
ஆனால், என்ன நடந்ததோ கடந்த சில தினங்களாக இப்படத்தின் போஸ்டர் டிசைன்களில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தயாரிப்பாளர் பெயர் இடம் பெறவில்லை. இதுவரை எந்த ஒரு படத்தின் விளம்பர டிசைன் வெளிவந்தால் அதில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரோ அல்லது தயாரிப்பாளரின் பெயரோ இல்லாமல் வெளிவந்ததே இல்லை. அதிலும் சமீப காலமாக வெளியாகும் முக்கிய படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகவோ அல்லது சில நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வெளியிடுவதாகவோதான் வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க கௌதம் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள முக்கிய படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம் பெறுவதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை படத்தை இயக்கிய கௌதம் மேனன் சொன்னால் மட்டுமே அது உண்மையாக இருக்கும்.