ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்த படம் என்பதால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு மட்டம் போட, கௌதம் மேனன் கடுப்பாக ஒரு கட்டத்தில் அச்சம் என்பது மடமையடா ட்ராப்பாகும் சூழல் உருவானது. முதல்பாதி காதல், இரண்டாம்பாதி ஆக்ஷன் என ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முதலில் பல்லவி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு படம் வளராமல் முடங்கிப்போனதால் ஒரு கட்டத்தில் பல்லவி விலகிச்சென்றுவிட்டார். அதன் பிறகு மஞ்சிமா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகுஙம என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது.
'அச்சம் என்பது மடமையடா' படத்தை பார்த்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கியது சென்சார். இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் படத்தை வரும் 11ஆம் தேதி வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். கடவுள் இருக்கான் குமாரு, மீன்குழம்பும் மண்பானையும் படங்கள் இந்த வாரம் வெளிவருவதால் தமிழகமெங்கும் சுமார் 600க்கும் அதிகமாகன திரையரங்குகளை அந்தப் படங்கள் பிளாக் பண்ணிவிட்டன.
எனவே 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குபோதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.