சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்த படம் என்பதால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு மட்டம் போட, கௌதம் மேனன் கடுப்பாக ஒரு கட்டத்தில் அச்சம் என்பது மடமையடா ட்ராப்பாகும் சூழல் உருவானது.
முதல்பாதி காதல், இரண்டாம்பாதி ஆக்ஷன் என ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முதலில் பல்லவி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு படம் வளராமல் முடங்கிப்போனதால் ஒரு கட்டத்தில் பல்லவி விலகிச்சென்றுவிட்டார். அதன் பிறகு மஞ்சிமா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது. 'அச்சம் என்பது மடமையடா' படத்தை பார்த்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கியது சென்சார். இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் படத்தை வரும் 11ஆம் தேதி வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர்.
'அச்சம் என்பது மடமையடா' படத்துடன் கடவுள் இருக்கான் குமாரு, மீன்குழம்பும் மண்பானையும் படங்கள் இந்த வாரம் வெளிவருவதால் மூன்று படங்களுக்கும் எந்தளவு தியேட்டர் கிடைக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.