பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், தமன்னா நடித்து வரும் படம் கத்திசண்டை. சுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, சூரி காமெடி ஜோடி. இவர்கள் தவிர ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண்தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, ஆர்த்தி உள்ளபட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார்.
தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தை பற்றி இயக்குனர் சுராஜ் கூறியதாவது: இந்த படத்தை ஆக்ஷன், காமெடி , செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி உள்ளோம்.. 50 சதவிகிதம் காமெடி, 50 சதவிகிதம் ஆக்ஷன். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். வடிவேலுவும் சூரியும் காமெடியில் பின்னி இருகிறார்கள். தலைநகரம், மருதமலை படங்களுக்கு பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். படிக்காதவன் படத்திற்கு பிறகு தமன்னாவும் நானும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம் . படப்பிடிப்பு சென்னை, அருப்புக்கோட்டை , ஹைதராபாத், ஜார்ஜியா போன்ற இடங்களில் நடைபெற்றது. அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது.
படப்பிடிப்பில் நாங்கள் அதிகம் சிரமப்பட்டது. ஒரு சேசிங் காட்சியை படமாக்கியதுதான். இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இந்த சேசிங் காட்சி இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் சிறப்பு அனுமதி பெற்ற 12 கேமராக்களை கொண்டு இதனை படம்பிடித்தோம். வில்லன்கள் தருண் அரோரா, ஜெகபதிபாவு ஆகியோரை விஷால் துரத்தி செல்லும் காட்சி அது. பயிற்சி பெற்ற கார், மற்றும் பைக் ரேஸிங் வீரர்கள் 50 பேர் கலந்து கொண்டு நடித்தார்கள். படத்தில் 4 நிமிடங்கள் இடம்பெறும் இந்தக் காட்சியை 7 நாட்கள் படம்பிடித்தோம். படத்தில் இந்த காட்சி பேசப்படுவதாக இருக்கும். என்றார் இயக்குனர் சுராஜ்.