பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் வெளியான முதல் படமான இது என்ன மாயம் வெற்றி பெறவில்லை. என்றபோதும் அதன்பிறகு நடித்த ரஜினிமுருகன், ரெமோ படங்களின் ஹிட் காரணமாக இப்போது விஜய்யின் பைரவா மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். இதனால் அவரது சம்பளமும் ஒரு கோடியை தொட்டு நிற்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர் மன்றம் திறப்பது சம்பந்தமாக சில ரசிகர்கள் அவரை தொடர்பு கொண்டபோது, அதற்கு பிடிகொடுக்கவில்லை கீர்த்தி சுரேஷ். அதேசமயம், அப்படி ரசிகர்கள் தன்னிடம் கேட்டபோது தான் இன்ப அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு தமிழகத்திலுள்ள ரசிகர்கள் சிலர் ஒரு கோயில் கட்டியிருப்ப தாக இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. குஷ்பு, நமீதாவைத் தொடர்ந்து எந்த நடிகைகளுக்கும் ரசிகர்கள் கோயில் கட்டவில்லை. ஆனால் இப்போது கீர்த்தி சுரேஷ் அந்த பட்டியலில் சேர்ந்திருப்பதன் மூலம் பரபரப்பான நடிகையாகியிருக்கிறார்.
Tags- keerthi suresh, kushboo, namitha, temple.