சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
கவுதமி விவகாரத்தில் நான் எந்த அறிக்கையும், வெளியிடவில்லை என்று கமல் கூறியுள்ளார். திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, கமல் - கவுதமி ஜோடி பிரிந்தது. கமலை விட்டு பிரிவதாக, கவுதமி, நேற்று அறிவித்தார். இதுப்பற்றி நடிகை கவுதமி ஒரு பக்க அறிக்கையாக வெளியிட்டார். குறிப்பாக நானும் கமலும் பிரிந்து விட்டோம் என்பதை, கனத்த இதயத்துடன் உங்களிடம் பகிர்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு இது என்று கூறியிருந்தார்.
இதனிடையே கமல்ஹாசன் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதில், ‛‛என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என் தட்டில் வந்துவிழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டிலிருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்'' என்பது மாதிரியான தகவல்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. ஆனால் இதை கமல் வெளியிடவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனே தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை'' என்று கூறியுள்ளார்.