டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவார் என்று நடிகை நமீதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக செப்., 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய பிரபலங்களும் பலரும் மருத்துவமனை சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதல்வரின் உடல்நலம் பற்றி நலம் விசாரித்து சென்றார். இந்நிலையில் இன்று நடிகையும், அதிமுக., உறுப்பினருமான நமீதா, முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா... ‛‛முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வருவார், பூரண நலம்பெற்று மீண்டும் அவர் மக்கள் பணிக்கு திரும்புவார்'' என்று கூறியுள்ளார்.