அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் வெளிவந்த படங்கள் அனைத்துமே 25 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அது சாதாரண சாதனை அல்ல. அக்டோபர் 7ம் தேதி சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ', விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்த 'றெக்க', பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன.
மூன்று படங்களுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அளவுக்கதிமாக விளம்பரப்படுத்தியதால் 'ரெமோ' படம் மற்ற படங்களை விட வசூலில் முன்னிலை பெற்றது. 'தேவி' படம் வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் வித்தியாசமான பேய்ப் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு விளம்பரம் பெரிதும் கைகொடுக்கவில்லை என்றாலும் படம் பற்றிய 'மவுத் டாக்' படத்திற்கு ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அதனால், இந்தப் படம் வசூலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது. 'றெக்க' படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தத் தவறிவிட்டார்கள். அந்தப் படம் பற்றி படத்தில் நடித்த விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் கூட எந்த ஒரு பேட்டி மூலமும் விளம்பரப்படுத்தவில்லை. இதனால், மற்ற இரண்டு படங்களுடன் இந்தப் படத்தால் பெரிய அளவில் போட்டி போட முடியவில்லை. அதை மட்டும் சரி செய்திருந்தால்கள் என்றால் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றிருக்கும். அதனால் வசூலில் மூன்றவாது இடத்தைப் பிடித்தது.
இருந்தாலும் மூன்று படமும் மோசமான படமாக இல்லாமல் ரசிகர்களை 'என்டர்டெய்ன்' செய்ததால் 25வது நாளை இன்று வெற்றிகரமாகக் கடக்கக் காரணமாகி விட்டது.