ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படம் மரகத நாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர முண்டாசுபட்டி ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ், டேனியல், ஆனந்தராஜ், கோட்டா சீனிவாசராவ், பரமானந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் உதவியாளர் திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார்.
"இன்று நேற்று நாளை போன்றே இதுவும் பேண்டசி கதை. அதில் டைம் மிஷின் மேட்டர், இதில் மரகத நாணயம் மேட்டர். மன்னர் காலத்தை சேர்ந்த ஒரு முக்கிய பொருள் மரகத நாணயம். பல கோடி மதிப்புள்ள அந்த நாணயத்தை பற்றி ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு இரண்டு குரூப்கள் அதனை தேடிச் செல்கிறது. ஆதி தலைமையில் ஒரு குரூம், வில்லன் கோட்டா சீனிவாசராவ் தலைமையில் ஒரு குரூப்.
மரகத நாணயம் பற்றி மன்னர் கால காட்சிகள் இருக்கிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் ராகுல் பிரமாண்ட அரண்மணை செட் போட்டுக் கொடுத்தார். படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். சீரியசான கதை போல தெரிந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.