மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் தனது அடுத்த படமான 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார் மெகாஸ்டார் மம்முட்டி.. ஹனீப் அதேனி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார்.. சிறப்பம்சமாக ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இந்தப்படத்தை பிருத்விராஜ் தயாரிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள சுற்றுலா தலமான வாகமனில் நடைபெற்று வருகிறது..
இதே வாகமன் பகுதியில் தான் 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா டைரக்சனில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துவரும் 'மகளிர் மட்டும்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுகொண்டு இருக்கிறது.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சீனியர் நடிகைகளான ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கு தங்கள் ஷூட்டிங் ஸ்பாட் அருகிலேயே மம்முட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது என்கிற செய்தி எட்டியது..
அவ்வளவுதான்.. ஜோதிகாவுக்கோ தான் இதுவரை சேர்ந்து நடித்திராத மம்முட்டியை பார்த்து, அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை. மற்ற மூன்று நடிகைகளும் மம்முட்டியுடன் எண்பது, தொண்ணூறுகளில் கதாநாயகியாக, தங்கையாக நடித்தவர்கள் தான். அவர்களுக்கு தங்கள் செல்ல 'மம்முக்கா'வை சந்தித்துவிட வேண்டும் என ஜோதிகாவை மீறிய ஆர்வம் இருந்தது.. உடனே 'தி கிரேட் பாதர்' படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற நால்வரும் மம்முட்டியை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். இந்தப்புகைப்படத்தை மம்முட்டியே தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த நேரம் வரை 75ஆயிரம் லைக்குகளை அள்ளி வைரலாகியுள்ளது இந்த புகைப்படம்.