'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் போகன் படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார் ரோமியோ ஜூலியட் வெற்றிப் படத்தை இயக்கியவர். பிரபுதேவா தயாரிக்கிறார். போகன் படத்தின் கதை என்றுடையது என்று உதவி இயக்குனர் ஆண்டன் தாமஸ் என்பவர் புகார் கொடுத்தார். தற்போது இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் போகன் கதை எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் அல்ல. பொதுவான கான்செப்ட்டில் எழுதப்பட்ட சொந்த கதை என்று விளக்கம் அளித்துள்ளார் லக்ஷ்மண். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போகன் படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன். தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக்கிடமும் கூறியிருந்தேன். அவரிடம் ஆண்டன் தாமஸ் தனது கதையை கூறியுள்ளார். அப்போது அவர் இதுபோன்ற ஒரு கான்செப்டில் லக்ஷ்மண் ஒரு வருடத்திற்கு முன்பே என்னிடம் கூறியிருக்கிறார். அதைத்தான் இப்போது படமாக எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். எனது கதையை கேட்டுக் கொண்ட ஆண்டன் தாமஸ் அதைபோன்று எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவுவிட்டு, செய்து இப்போது பணம் பறிக்கும் நோக்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக எழுத்தாளர் சங்கத்தில் நடந்த விசாரணையின் போது போகன் கதையை உருவாக்கும்போது அதன் சாயலில் இருந்து சில ஆங்கில படங்களின் டிவிடிக்களை ஒப்படைத்தேன். உலகம் முழுவதும் ரோபோக்களை மையமாக கொண்டும், பேயை மையமாக கொண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு பொதுவான கான்சப்ட்டைத்தான் படத்தில் வைத்துள்ளேன். ஒருவரின் உழைப்பை திருடி வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் லக்ஷ்மண்.