தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் முன்னணி ஹீரோயினாகவும் தமிழில் தற்போது பல படங்களிலும் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. நேற்று காலை அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்துடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆண், ஒரு பெண் கைகள் மட்டுமே இருந்தன. “இந்த நல்ல நாளில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை. இப்படி நடந்ததிற்கு வருந்துகிறேன். அவர் யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அது பற்றி விரைவில் சொல்கிறேன். அவரை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருக்க முடியவில்லை. இப்படி ஒரு மகிழ்வில் நானும் இருப்பேன் என நினைக்கவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் அந்தப் பதிவை அவர் பின்னர் நீக்கிவிட்டார். இருந்தாலும் அந்தப் பதிவும், புகைப்படமும் அதற்குள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவிட்டது. ரெஜினா நேற்று திடீரென அப்படி அறிவிக்க என்ன காரணம், அதை உடனடியாக நீக்கியதற்கு என்ன காரணம் என டோலிவுட்டில் இருப்பவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். தெலுங்கில் தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் ஒருவரை ரெஜினா காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே கிசுகிசு இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
மேலும் சமூக வலைதளங்களிலும் ஒரு போட்டோ வைரலாக பரவி வருகிறது. அதில் ரெஜினா, விளையாட்டு பயிற்சியாளரான விக்ரம் ஆதித்யா என்பவருடன் செல்பி எடுத்தபடி நெருக்கமாக போட்டு எடுத்துள்ளார்.
உண்மையில் ரெஜினாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா... இல்லை, இது அவர் நடித்து வரும் தமிழ்ப் படத்திற்கான விளம்பர ஸ்டன்ட்டா என்பது அவருக்கே வெளிச்சம்.
ரெஜினா தற்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் 'நெஞ்சம் மறப்பதில்லை', உதயநிதி ஸ்டாலினுடன் 'சரவணன் இருக்க பயமேன்,', அதர்வாவுடன் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', மற்றும் 'மாநகரம், ராஜதந்திரம் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.