டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒவ்வொரு வருட தீபாவளிக்கு முன்பும் புதுப் பட வெளியீடுகள் மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு இரண்டு வாரம் முன்பாக எந்தப் புதுப்படங்களையும் வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு எப்படியும் பெரிய படங்கள்தான் வரும். அந்தப் படங்களுக்காக சில பல கோடிகள் விளம்பரம் செய்து படத்தைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். அதனால்தான் சில சிறிய படங்கள் கூட தீபாவளி எதிரில் இருக்கும் போது படத்தை வெளியிட விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு நிகழ்வு கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்த் திரையுலகத்தில் இருந்து வருகிறது.
அக்டோபர் 7ம் தேதியன்று 'ரெமோ, றெக்க, தேவி' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே வெற்றி பெற்று இரண்டு வாரங்களை வெற்றிகரமாக முடிக்க உள்ளன. அக்டோபர் 14ம் தேதியன்று 'அம்மணி' படம் மட்டுமே தனியாக வெளிவந்தது. நாளை 21ம் தேதி 'காகித கப்பல், நீ என்பது' ஆகிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இவற்றோடு ஏற்கெனவே வெளிவந்த 'கதிரவனின் கோடை மழை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார்கள்.
அடுத்த வாரம் தீபாவளியன்று 'காஷ்மோரா, கொடி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிட அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.