ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் அடுத்து நடிக்கும் படம் தாயம். பியூச்சர் பிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார், கண்ணன் ரங்கசாமி இயக்கி உள்ளார். இந்தப் படம் சா மற்றும் எக்ஸாம் என்ற ஹாலிவுட் படங்களின் தழுவல் என்ற செய்திகள் வெளியானது. இதனை ஹீரோ சந்தோஷ் பிரதாப் மறுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதில் எந்த விதத்திலும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க ஒரு நேர்க்காணலை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் தாயம். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதைக்களத்தில் ஒரு தனித்துவமான சிறப்பம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தின் கதைக்களம் மாறி கொண்டே இருக்கும். மர்மம், திகில், சஸ்பென்ஸ் என கதைக்களம் மாறி கொண்டே இருக்கும்.
இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமே முகமூடி மனிதன் தான். அந்த முகமூடி மனிதனுடன் தாயம் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் நான் விளையாடுகிறேன். அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ப்ரோஸ்த்தெடிக் மாஸ்க் எனப்படும் முகமூடியை அமெரிக்காவில் இருந்து அதிக தொகை கொடுத்து இறக்குமதி செய்தனர் தயாரிப்பாளர்கள். இந்தப் படம் எனக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்று முழுமையாக நம்புகிறேன். என்கிறார் சந்தோஷ் பிரதாப்.