தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குக்கூ ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் குருசோமசுந்தரத்தின் மனைவியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். திருநெல்வேலியைச் சேர்ந்தவரான இவர், அந்த படத்தை அடுத்து சமுத்திரகனி நாயகனாக நடிக்கும் ஆண் தேவதை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கே.பாலசந்தர்-பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த ரெட்டசுழி படத்தை இயக்கிய தாமிரா இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து கொண்டிருந்த நேரம்தான், ஜோக்கர் படம் வெளியானது. அதில் ரம்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பைப்பார்த்த தாமிரா, இந்த நடிகைதான் எனது படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை உடனே ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
ஆக, தற்போது சமுத்திரகனி- ரம்யா பாண்டியன் இருவரும் ஆண்தேவதை படத்தில் கணவன்-மனைவியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சிலதினங்கள் ஆரம்பிக்கிறது. மேலும், சராசரி குடும்பத்தில் நிகழும் பிரச்சினை அடிப்படையில் இந்த படம் உருவாகி வருகிறது. அந்த வகையில், ஜோக்கர் படத்தில் அதிகம் பேசாமல் அமைதியாக நடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தில் கணவரிடம் அதிகமாக வாக்குவாதம் செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அதனால் ஜோக்கர் படத்தில் இருந்து ஆண்தேவதை படம் ரம்யா பாண்டியனை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் என்கிறார்கள்.