பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் கவியரசர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கவியரசர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனின் நினைவு நாள் இன்று. இதையொட்டி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இணையதளம் படக்குழுவும் கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. "இணையதளம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கண்ணணதாசன் நினைவு நாளையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் கவிஞருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இணையதளம் படத்தின் இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் பாபு, நடிகைகள் ஸ்வேதா மேனன், சுகன்யா, வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மரபின்மைமைந்தன் முத்தையா ஒளிப்பதிவாளர் திரு. கார்த்திக் ராஜா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர்.