‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த முக்கிய நடிகர்களாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் நடித்து வெளிவந்துள்ள ரெமோ, றெக்க ஆகிய இரண்டு படங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபுதேவா நடித்து வெளிவந்த தேவி என மூன்று படங்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியாகி மும்முனைப் போட்டியை உருவாக்கின.
ரெமோ படத்திற்கு முதல் பார்வை வெளியான நாளிலிருந்தே மிகப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தொடர்ந்து படத்தைப் பற்றி ரசிகர்களிடத்திலும் படத்தைப் பற்றிய தகவல்களை அளித்துக் கொண்டேயிருந்தார்கள். மற்ற இரண்டு படங்களும் அப்படி எதுவும் செய்யாத நிலையில் ரெமோ படத்திற்கு வெளியான முதல் நாளிலேயே அதிகாலை சிறப்புக் காட்சிக்கும் கூட மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. அது தொடர்ந்து நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை வரை நீடித்துள்ளது. அன்று வரை பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ரெமோ படத்தை இன்னும் இரண்டொரு நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரும் வெற்றி என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
விஜய் சேதுபதி ஒரு ஆக்ஷன் படத்திலா என்ற ஆச்சரியத்தை றெக்க படம் ஏற்படுத்தியது. படத்தைப் பற்றிய பிரமோஷன்களை முன்னரே ஆரம்பித்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிகமான வரவேற்பை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் முதலுக்கு மோசமில்லாத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை முன்பதிவு சிறப்பாகவே உள்ளது. மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சராசரியான வெற்றியை இந்தப் படம் பெற்றுவிடும் என்றே சொல்கிறார்கள்.
தமிழில் 2004ம் ஆண்டு வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் நடித்ததற்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து பிரபுதேவா நடித்து வெளிவந்துள்ள படம் தேவி. மூன்று மொழிகளில் தயாரித்துள்ளதால் ஏதாவது ஒரு மொழியில் ஓடினால் கூட படம் வெற்றி பெற்றுவிடும். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோருடன் போட்டி போட முடியாத நிலையிலும் பிரபுதேவாவிற்கும் அவருடைய நடனத்திற்கும் இன்றும் ரசிகர்கள் இருப்பதால் இன்று வரை படம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் உள்ள ஹிந்தி வாசம் இல்லாமல் இருந்திருந்தால் படத்திற்கு நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த மும்முனைப் போட்டியில் வசூல் ரீதியாக ரெமோ படம் ஆரம்பத்திலேயே வேகமாய் முன்னேறி, அதைத் தொடர்ந்து காப்பாற்றி முதலிடத்தைப் பிடித்து விடும். மற்ற இரண்டு படங்களும் பெரிய இடைவெளியில் வந்தாலும் றெக்க இரண்டாவது இடத்தையும், தேவி மூன்றாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது. ரெமோவுக்கு தங்கம், றெக்கக்கு வெள்ளி, தேவிக்கு வெண்கலம் என வெற்றிப் படிக்கட்டுகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.