அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சிறிய இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கிறது. சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் நாயகி எமி ஜாக்சன் கோவிலுக்கு செல்வது போலவும், ரஜினியும், எமியும் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலவுமான காட்சிகள் அங்கு படமாக்கப்படுகிறது. இதுதவிர திருக்கழுக்குன்றம் மலையில் ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்படுகிறது.
இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு சென்று படப்பிடிப்பிற்காக ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அது ரஜினி படத்திற்கான ஏற்பாடு என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ரஜினி படப்பிடிப்பிறகு சென்றதும்தான் அது 2.ஓ படப்பிடிப்பு என்று தெரிந்தது. ரஜினி காரை விட்டு இறங்கி கேரவனுக்குள் செல்வதற்குள் ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு மடக்கி விட்டனர். நெரிசல் ஏதுமின்றி குறைந்த ரசிகர்களே இருந்ததால் அவர்களுடன் சேர்ந்து நின்ற புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கேரவனுக்குள் சென்ற அவர் மேக்அப் போட்டு நடித்தார்.
திருக்கழுகுன்றத்துக்கு ரஜினி வந்திருக்கும் செய்தி காட்டுத் தீ போன்று பரவ... படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றி ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் ரஜினி, இயக்குனர் ஷங்கர் தவிர யாரும் செல்போன் பயன்படுத்த முடியாது. ரஜினி பொதுவாகவே செல்போன் பயன்படுத்துவதில்லை. ரஜினி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பங்களாவில் தங்கியிருந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருவாரம் வரை திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்புகள் நடக்கிறது. இதற்காக சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது.