ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காடு படத்திற்கு பிறகு விதார்த் தயாரித்து நடித்த படம் குற்றமே தண்டனை. காக்கா முட்டை மணிகண்டன் இந்த படத்தை இயக்கியிருந்தார். விதார்த் நடித்த படங்களில் ஒரு வித்தியாசமான கதையம்சத்தில் அப்படம் உருவாகியிருந்தது. அதையடுத்து விதார்த் நடித்துள்ள இன்னொரு மாறுபட்ட படம் ஒரு கிடாயின் கருணை மனு. சிறுதெய்வ வழிபாட்டைப்பற்றிய கதையில் உருவாகியுள்ள இந்த படமும் விதார்த்தின் கேரியரில் முக்கியமான படமாக இருக்குமாம். அதோடு, தற்போது அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்துள்ள அந்த படத்தை சில உலக சினிமா விழாக்களுக்கு அனுப்பியுள்ளனர். அதனால் படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.
இதையடுத்து குரங்கு பொம்மை, சின்னதாய் ஒரு படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விதார்த். இந்நிலையில் அவர் நடிக்கும் இன்னொரு படம் வருகிற ஆயுத பூஜை அன்று தொடங்கயிருக்கிறது. பில்லா பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம் மதுரை மண்வாசனை கதையில் உருவாகிறது. பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் இந்த படத்தில் பில்லா பாண்டி என்கிற அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கும் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சைத்தான் பட நாயகி அருந்ததி நாயர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.