தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மைனாவிற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கிய படம கும்கி. விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் லட்சுமிமேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார். யானை சம்பந்தமான கதையை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். இந்த பாகத்திலும் விக்ரம்பிரபுதான் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், முதல் பாகத்தின் க்ளைமாக்சில் கொம்பன் யானையை கும்கி யானை கொன்று விடும். பின்னர் அந்த கும்கி யானையும் இறந்து விடும். ஆனால், இந்த கும்கி-2வில், அந்த கும்கி யானை உயிரோடு இருந்த நேரத்தில் ஒரு பெண் யானையுடன் இணைந்தபோது அதற்கு பிறந்திருந்த குட்டி யானை ஒன்று பெரிதாக வளர்ந்திருக்குமாம். அந்த யானைகள் ஒன்று சேர்ந்த ப்ளாஷ்பேக் காட்சி இப்போது இடம்பெறப்போகிறதாம். அதையடுத்து அந்த பெண் யானை பெற்றெடுத்த குட்டியானை பெரிதாக வளர்ந்த பிறகு விக்ரம் பிரபுவை தேடி வருமாம். அதை அவர் பாசத்தோடு வளர்ப்பது போன்று கும்கி-2 படம் உருவாகயிருக்கிறதாம்.