அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தான் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் தன்னைப் பற்றி பரபரப்பாக எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவர் சிம்பு. அவர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படம் எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாத ஒரு சூழ்நிலையில் தனக்கென இருக்கும் அந்த கொஞ்ச நஞ்ச ரசிகர்களை இழந்துவிடாமல் இருக்க எதையாவது செய்து கொண்டிருக்கிறார்.
'அச்சம் என்பது மடமையடா' படமாவது வெளிவந்தால் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் புண்ணியத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பிலும் ஏதாவது ஒரு மாஜிக் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு அவர் செய்யும் அலட்டல்களே படத்தை அலற வைத்துவிடும் போலிருக்கிறது.
புதிதாக 'அஸ்வின் தாத்தா' என்ற வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு பின்பு புகைப்படத்தைக் காட்டி டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் 'படையப்பா' படத் தோற்றத்தை காப்பியடித்து அப்படி ஒரு தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தலைமுடியை மட்டும் நரை முடியா மாத்திட்டா வயதான தோற்றம் வந்துடுமா..?. கால் வரைக்கும் மாற்ற வேண்டாமா..?. ரஜினியே கூப்பிட்டு சிம்புவை திட்டினால்தான் அவரைக் காப்பியடிப்பதை சிம்பு நிறுத்துவார் போலிருக்கிறது.