Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியர் அண்ணாமலை மரணத்தில் சந்தேகம் - சர்ச்சை கிளப்பும் உறவினர்கள்

29 செப், 2016 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Doubt-in-Lyricist-Annamalais-death

சினிமா பாடலாசிரியர் அண்ணாமலை, மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த, கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 50. பச்சையப்பன் கல்லுாரியில் தமிழ் பயின்றவர், படிக்கும் காலத்திலேயே, சினிமா கனவுகளோடு தன்னை தயார்படுத்தியவர். அப்போதே, தொலைக்காட்சி தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார். பின், பத்திரிகையாளராக, பல ஆண்டுகள் பணியாற்றினார். கும்மாளம் படத்தில், பாடலாசிரியராக அறிமுகமானார். வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, உத்தமபுத்திரன் உட்பட, 50 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் அண்ணாமலை. என் உச்சி மண்டையிலே கிர்றுங்குது... போன்ற பிரபலமான பாடல்கள், இவரது எண்ணங்களில் உதித்தவை.


இயற்கையானது அல்ல : சினிமா இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியோடு நெருக்கமாக இருந்தவர். அவர் நடித்து, இசையமைக்கும் படங்கள் அனைத்திலும் பாடல்கள் எழுதினார்.குறுகிய காலத்தில், 50 படங்களுக்கு மேல் பாடல் எழுதிய அண்ணாமலையின் வாழ்க்கையும் மிகக் குறுகிய காலத்துக்குள் முடிந்தது. இதற்கிடையில், அவரது மரணம் இயற்கையானது அல்ல; சந்தேகத்துக்கு உரியது என, அவரது உறவினர்கள் சர்ச்சை கிளப்பி உள்ளனர்.


அண்ணாமலை உறவினர்கள் கூறியதாவது: சமீபத்தில் தான், சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு, அண்ணாமலை குடி வந்தார். திருமணமாகி, 14 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகள், மவுனாவின் படிப்புக்காக, அந்தப் பகுதியில் குடியேறினார். நேற்று முன்தினம் காலை, 8:40 மணிக்கு, கடைசியாக, தன் நண்பர் ஒருவரிடம், மொபைல் போனில் பேசியுள்ளார். அதன் பின், அவர் போனை எடுக்கவில்லை. ஆக, அப்போதே, அவர் இறந்திருக்க வேண்டும்; அல்லது சுய நினைவு இழந்திருக்க வேண்டும். ஆனால், மாலை, 4:00 மணிக்கு மேல், வீட்டுக்கு வந்த அவர் மனைவி, வீட்டில் அண்ணாமலை மயங்கிக் கிடப்பதை பார்த்து, பதறிப் போய், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறுகின்றனர். பல மணி நேரம் தனியார் மருத்துவமனையில், அண்ணாமலையை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர்.


அதன் பின், உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள், அண்ணாமலை தலையில் பலத்த அடிபட்டுள்ளது; இது, சந்தேகத்துக்குரியதாக உள்ளதால், கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, கூறியுள்ளனர்.


பிரேத பரிசோதனைக்குப் பின், பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே, குடும்பத்தில், அண்ணாமலைக்கு பிரச்னைகள் இருந்தது. அந்த கோணத்தில், போலீசார் விசாரித்தால், மரணத்தின் பின்னணி வெளிப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in