ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ராஜ்தாக்ரேயின் நவநிர்மான் சேனா மிரட்டல் விடுத்துள்ளது. இது இந்திய கலைஞர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் இதுகுறித்து அங்குள்ள நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது: இசைக்கு நாடு கிடையாது, மொழி கிடையாது, நேரம் கிடையாது, காலம் கிடையாது, எதுவுமே கிடையாது, இசை இசைதான். இசை எல்லைகளை கடந்தது அதற்கு எல்லைகளே கிடையாது என்றார். பாகிஸ்தான் கலைஞர்களை வெளியேற்றக்கூடாது என்ற கருத்தை தன் பாணியில் இப்படி கூறினார் இளையராஜா.
ரகுமான் கேள்விக்கு கடுப்பு : பின்னர் இளையராஜாவிடம் "ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டபோது கோபமாக இளையராஜா அளித்த பதில்: இந்த கேள்விளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். அதே கருத்துடன் நானும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்ககூடாது என்றார்.